தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்தும் நிராகரிப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இடம்பெறும் ஒன்றிணைந்த யுத்த பயிற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பேச்சுவார்த்தையை நிராகரிப்பதாக வடகொரியா குறிப்பிட்டுள்ளது. தமது நாட்டை அழிக்கும் நோக்கில் இடம்பெறும் பயிற்சியென வடகொரியா குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை இன்று அதிகாலை வடகொரியா மேலும் இரண்டு ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 6 ஏவுகணைகளை வடகொரியா பரீட்சித்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.