பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியை மீட்பதற்கென இந்தியா போருக்கு தயாராவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காஷ்மீர் பகுதியை மீட்பதற்கென இந்தியா போருக்கு தயாராவதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாகவும் இதற்கு தகுந்த பதிலடி வழங்க தமது இராணுவமும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். காஷ்மீர் தொடர்பில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்பதற்கு வருந்துவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.