எந்தவொரு அவசர அனர்த்த நிலைமைகளையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாரென அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலையையடுத்து கல மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளுக்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் மீட்பு பணிகள் முன்னெக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.