நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணிவரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் அதில் உள்ளடங்கும்.
இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொட, எலபாத்த மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹோபிட்டிய, தெரணியகல, எட்டியந்தோட்ட மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மண்சரிவு, கற்பாறைகள் சரிதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.