இலங்கை மின்சார துறையின் முதலீடு தொடர்பில் சுவிட்சர்லாந்து கவனம் செலுத்தியுள்ளது. இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹன்ஸி பீட்டர் மொக் மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இதுதொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கிடையிலான மேலும் பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. நாட்டில் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சூரிய சக்தி மின்சார கட்டமைப்பு தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்தியுள்ள விதம், பாவனையாளர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை மற்றும் இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கப்பெறும் இலாபம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சுவிட்சர்லாந்து தூதுவருக்கு தெளிவுபடுத்தப்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.