இராணுவ தலைமையகத்தில் பணியிலிருந்த இராணுவ வீரரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது பணிக்கென வழங்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி அவர் தன்னை சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த இராணுவ தலைமையகத்தில் இணைந்து பணிபுரிந்தவராவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.