யேமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. யேமன் அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் காணப்படும் மோதல் நிலையை முடிவுக்கு கொண்டுவருவதே இதன் நோக்கமாகும். பேச்சுவார்த்தைகளினூடாக பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படுமெனவும் ஈரான் தெரிவித்துள்ளது. சவூதி தலைமையிலான ஒன்றிணைந்த பாதுகாப்பு பிரிவு மற்றும் யேமன் கிளர்ச்சியாளர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.