ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் தலிபான் பயங்கரவாத தலைவர்கள் இருவர் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக தொடரும் உள்நாட்டு போரை நிறைவுக்கு கொண்டுவர தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அந்நாட்டு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் தொடரும் நிலையில் இராணுவத்தினரும் பதில் தாக்குதலை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.