தெவுந்தர தலல்ல கடலில் மூழ்கிய இரண்டு வெளிநாட்டவர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
வெளிநாட்டவர்கள் சிலர் தலல்ல கடலில் நீராடிக்கொண்டிருந்த போது இவ்வாறு இவர்களில் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். இதன்போது தெவுந்தர தேவாலயத்தின் உற்சவத்தில் கலந்து கொண்டவர்களின் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டிருந்த கடற்படையினர் மற்றும் மீட்கு குழுவினர் உடனடியாக செயற்பட்டு இந்த வெளிநாட்டவர்களை மீட்டுள்ளனர். ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 28 மற்றும் 47 வயதுடையவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.