இந்த வருடத்திற்குள் ரெயில் பயணத்திற்கான இலத்திரனியல் பயணச்சீட்டு அறிமுகப்படுத்தப்படுமென ரெயில்வே பொது முகாமையாளர் திலங்க பெர்னாந்து தெரிவித்துள்ளார். நான்கு கட்டங்களின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த முறைக்கு பயணிகள் பழக்கப்படும் வரையில் சாதாரண பயணச் சீட்டுக்களை விநியோகிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரெயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.