இந்தியாவில் 3 மாநிலங்களில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்வடைந்துள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஸ்டிரா ஆகிய மாநிலங்களில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளத்தினால் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளன. 72 மரணங்கள் அங்கு பதிவாகியுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 2 இலட்சத்திற்கும் அதிகமனோர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தின் 3 மாவட்டங்களுக்கு சீரற்ற வானிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினர், கடற்படையினர், கரையோர பாதுகாப்பு அதிகாரிகள், பொலிசார் , மீனவர்கள் உட்பட தன்னார்வ அமைப்புகளின் உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர்.