கொழும்பு வீதிகளில் குவிந்துள்ள குப்பைகள் அறுவக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ பகுதிக்கு எடுத்துச்செல்லப்படுவதாக கொழும்பு மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஒரு சில தினங்களில் கொழும்பின் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென ஆணையாளர் பாலித நாணயக்கார குறிப்பிட்டார். நேற்று இரவு 15 குப்பை லொறிகள் அறுவக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ பகுதிக்கு குப்பைகளை எடுத்துச்சென்றன. இன்றும் குப்பைகள் அனுப்பிவைக்கப்படும்.
இதேவேளை கொழும்பில் சேரும் குப்பைகள் கெரவலப்பிட்டிய பகுதியில் ஒன்றிணைக்கப்பட்டு அறுவக்காடு பகுதிக்கு எடுத்துச்செல்லப்படுமென கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை புத்தளம் அறுவக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவுக்கு கிடைக்கும் குப்பைகள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படும். இதற்கு தேவையான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.