இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஸ் படிகளில் அமர சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செயற்படுவோருக்கு தண்டப்பணம் அறவிடப்படுமென இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது. ஸ்பானிஷ் படிகள் 1723ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. படிகளில் அமர்ந்து புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறுவோருக்கு 400 யூரோ அபராதம் விதிக்கப்படுமென இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.