மாற்று திறன் மாணவர்கள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கு இடையே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஒன்று மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஐக்கிய ஐரோப்பிய காற்பந்து சங்கம் அவுஸ்திரேலிய நிதி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மாகாண கல்வி திணைக்களத்தின் வழிக்காட்டலில் அம்பாரை, கல்முனை, மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு மத்தி ஆகிய கல்வி வலயங்களில் உள்ள விசேட மூவின மாணவர்கள், மற்றும் விசேட தேவையுடைய பாடசாலைகளின் ஆசிரியர்கள், கல்வி திணைக்களத்தின் துறைசார் அதிகாரிகளை பயிற்றுவிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹியுமினிட்டி இன்க்லுஷன் மற்றும் கெமிட்ட ஆகிய நிறுவனங்கள் இத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
மட்டக்களப்பு சத்துருகொண்டான் சர்வோதய நிலையத்தில் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் கிறிஸ்டி குணரட்னம் தலைமையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இச்செயல் அமர்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு வழிக்காட்டிகள் மற்றும் இருவட்டுக்களும் வழங்கப்பட்டன. திட்ட உததியோகத்தர் லியோன் லோரன்ஸ், ஸ்டீவ் ஆர்னட், ஜி.தங்கேஸ்வரன் ஆகியோர் இதில் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.