மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நேற்று காணமல்போன ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாந்தை கிழக்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியிலுள்ள குமரிக் குளத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை 5 மணியளவில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் இணைந்து இரவு 8 மணி முதல் குமரிக்குளத்தில் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்தனர். அதற்கமைய இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவரின் சடலம் குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மல்லாவி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.