நாட்டின் வடக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோமலை, மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மாலை வேளையில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீர்கொழும்பு முதல் மன்னார், காங்கேசன் துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல்பகுதிகளில் காற்றானது மணிக்கு 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள், கடல் தொழிலாளர்கள் இதுகுறித்து மிகவும் அவதானமாக செயற்படவேண்டுமென கடமையிலிருந்த வானிலையாளர் கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.