கொழும்பு துறைமுக நகரத்திற்குரிய நிலப்பரப்பை கொழும்பு நிருவாக மாவட்டத்தில் இணைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் வஜிர அபேவர்தனவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு துறைமுக நகர் அடையாளம் காணப்படுகின்ற நிலப்பரப்பு கொழும்பு நிர்வாக மாவட்ட அதிகார பகுதிக்கும் எல்லைக்குட்படுவதாக இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 446.6 ஹெக்டயர் நிலப்பரப்பை கொண்ட கொழும்பு துறைமுக நகராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பு எதிர்காலத்தில் கொழும்பு பிரதேச செயலக பிரிவிற்குள் அடங்குகின்றது.