ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் ஊடான 200 க்கு மேற்பட்ட விமான போக்குவரத்துக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த விமான நிலையத்தின் கட்டுப்பாட்டறை ஊழியர்களும் குறித்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது ஒரு ஓடுதளத்தின் ஊடாக மாத்திரமே விமான சேவைகள் இடம்பெறுவதாக தெரியவருகிறது.
இதேவேளை விமான நிலையத்துடன் தொடர்படும் அதிவேக ரயில்சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் ஏற்படக்கூடிய நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.