அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். டெக்சாஸின் எல்பாசோ நகரில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிதாரிகள் சிலர் வர்த்தக நிலையமொன்றுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான கானொளிகளும் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமென தெரியவந்துள்ளது. தாக்குதலையடுத்து எல்பாசோ நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெக்சாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.