கொழும்பு வெள்ளகட்டுபாட்டிற்கான 3வது நீர் இறைக்கும் மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. புனித செபஸ்டியன் தெற்கு வாவியுடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படுகின்ற இந்நிலையத்தின் மூலம் பேரே வாவிக்கு நீர் அனுப்பட்டு அங்கிருந்து வான்கதவுகள் மூலம் நீரை கடலுக்கு விடுவிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கால்வாய்களின் நீர்மட்டம் மாற்றமடைவதையும் மழைவீழ்ச்சியின் அளவையும் கருத்திற்கொண்டு இம்மத்திய நிலையம் தன்னியக்கமாக செயற்படகூடியவாறு நிர்மாணிக்கப்படுகின்றது.
இத்திட்டத்திற்கென 1579 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 17 மாதங்களுக்குள் நிர்மாண பணிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் கம்பனியொன்று ஆலோசனை சேவைகளை வழங்குகின்றது. இம்மத்திய நிலையத்தில் இருந்து ஒரு நிமிடத்திற்கு பத்து சதுர மீட்டர் கொள்ளவு கொண்ட நீர் வெளியேற்றப்படவுள்ளது. தன்னியக்கமாக இயங்ககூடியவாறு நவீன தொழில்நுட்பங்கள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.