ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பரீட்சை நடைபெறவுள்ளது. இம்முறை 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 2 ஆயிரத்து 995 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாடசாலைகள் ஒரு மாத காலம் மூடப்பட்டிருந்தன.
இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டன. இதனால் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் பரீட்சை வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.