புறக்கோட்டை 2 ஆம் குறுக்கு வீதியில் சிறுவன் ஒருவரின் கழுத்திலிருந்து தங்க சங்கிலியொன்றை திருடும் காட்சி அருகிலுள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று பிற்பகல் 4.45 மணியளவில் புறக்கோட்டை 2 ஆம் குறுக்கு வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபர் நீண்ட நேரம் இச்சிறுவனை பின் தொடர்ந்து வருவதை காணொளியில் அவதானிக்க கூடியதாகவுள்ளது. பெற்றோருடன் சிறுவன் அருகிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் செல்ல முயன்ற போது சந்தேக நபர் சங்கிலியை திருடுவது சிசிரிவி கமராவில் பதிவாகியிலுள்ள குறித்த சிசிரிவி கமரா இவ்வீதியிலுள்ள பள்ளி வாசில்ல பொருத்தப்பட்டுள்ளது. புறக்கோட்டை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.