இந்தோனேஷியாவில் கப்பலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹரிமுன் மாவட்டத்தில் கப்பல் பழுது பார்க்கும் தளமொன்றில் தனியாருக்கு சொந்தமான சொகுசு கப்பல் ஒன்று பழுது பார்ப்பு வேலைக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளதாக இந்தோனேஷிய செய்திகள் தெரிவிக்கின்றன.