ஜம்புகஸ்முல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
இதற்கு உதவிய சந்தேகநபர் நுகேகொடவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவரிம் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ துப்பாக்கிச்சூட்டை மேற்கொள்ள வந்த சந்கேதநபரின் தலைகவசங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.