பாகிஸ்தானின் ராவல் பின்டி நகரில் சன நெரிசல் கொண்ட பகுதியில் சிறிய ரக இராணுவ விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்;துள்ளனர். ராவல்பிண்டியிலுள்ள காரிசன் நகரில் இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து நொருங்கி விபததுக்குள்ளானது.
உயிரிழந்தவர்களில் 5 இராணுவ வீரர்களும் 12 பொது மக்களும் இவ்வாறு உயிரிழந்ததாக பாகிஸ்தான் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அத்துடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இவ்விமானமானது பயிற்சி நடவடிக்கைகளுக்கென பயன்படுத்தப்படுகின்ற விமானம் என இனங்காணப்பட்டுள்ளது. விமானம் விழுந்து நொருங்குவதற்கு முன்னர் தீப்பற்றியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.