வாராந்த அமைச்சரவை கூட்டம் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது 70 அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவை கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.
இதற்கு முன்னர் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் 9.30 மணிக்கு கூடிய அமைச்சரவை கூட்டம் இன்று முதல் 7.30 மணிக்கு கூடுமென ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது. அதற்கமைய இன்றையதினம் காலை 7.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் ஆரம்பமானது.