காணி உரிமம் இல்லாத குடும்பங்களுக்கென எதிர்வரும் 5 மாதங்களில் காணி உரிமத்தை உறுதிசெய்யவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 10 இலட்சம் காணி உரிமங்களை வழங்கும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் பல பிரதேசங்களுக்கு விரைவில் காணி உரிமங்கள் வழங்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் காணி உரிமம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் மக்கள் மாத்திரமன்றி நாட்டின் அனைத்து தரப்பினர் குறித்தும் கவனம் செலுத்தி காணி உரிமங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.