இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் வெளிச்ச வீடு கடற்பகுதியில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.
வடக்கு கடற்படை பிரிவுக்கு சொந்மான ரோந்து படகுகள் நடத்திய சுற்றிவளைப்பில் இந்திய மீனவர்கள் கைதாகியதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார். இதேவேளை கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 18 முதல் 36 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.