பங்களதேஷில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 114 பேர்பலியாகியுள்ளனர். அதிகளவான உயிரிழப்புக்கள் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜமால்பூர் பிரதேசத்தில் அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
மழை மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 12 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக பங்களதேஷ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1975 ம் ஆண்டுக்கு பின்னர் பங்களதேஷில் ஏற்பட்டுள்ள மிக அனர்த்தமாக இது பதிவாகியுள்ளது.