இங்கிலாந்துடனான வர்த்தக நடவடிக்கைகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள பொரிஸ் ஜோன்சனுடன் இடம்பெற்ற தொலைபேசி மூலமான உரையாடலினைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவினை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறியவுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்த சில பிரித்தானிய உறுப்பினர்களே இங்கிலாந்து – அமெரிக்க வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் ட்ரம்ப் இதன்போது குற்றம் சுமத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.