டுத்த மாதம் 5 ம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை மத்திய நிலையங்களை அண்மித்த இடங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.