இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலான இடைக்கால அறிக்கையொன்று இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவி;டம் அவரது அலுவலகத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றிய இடைக்கால அறிக்கை பதில் அமைச்சர் புத்திக பத்திரனவினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. நுகர்வோர் அதிகார சபையினால் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.