வருடாந்தம் 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 6 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இலங்கையிலுள்ள மொத்த புற்றுநோயாளர்களில் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.5 வீதமென தேசிய புற்றுநோய் ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுகத் சமரவீர தெரிவித்துள்ளார். வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 78 வீதமானோர் ஆண்களாவர். வாய் புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு இருவர் உயிரிழப்பதாக வைத்தியர் சுகத் சமரவீர தெரிவித்தார்.