உலகில் வயதில் கூடிய ஜனாதிபதியாக கருதப்படுகின்ற டியுனீசிய ஜனாதிபதி பெஜி கைட் எஷப்சி தனது 92 வயதில் நேற்று காலமானார். வடக்கு ஆபிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையும் இவரைச் சாருகின்றது. டியுனீசிய அரசாங்கம் ஜனாதிபதியின் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கதினமாக அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் மறைவைத் தொடர்ந்து அந்நாட்டு பாராளுமன்றத்தின் சபாநாயகரான மொஹமட் இனாசூர் பதில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார. நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள அந்நாட்டு ஜனாதிபதி தேர்தல் வரை இனாசூர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார் என அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.