முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை கொழும்பு விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
டி.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகம் அமைக்கப்பட்டமை தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு கொழும்பு விசேட நிரந்தர மேல் நீதிமன்றில் விசாரணையிலுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வரை இவ்வழக்கு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. கொழும்பு நிரந்தர விசேட மேல் நீதிமன்றத்திற்கு இவ்வழக்கை விசாரணை செய்வதற்கு அதிகாரம் உள்ளதா என கோரி கோட்டாபய ராஜபக்ஷ தரப்பினர் சமர்ப்பித்துள்ள மனு மீதான விசாரணை முடிவடையும் வரை இத்தடையை விதிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.