2024ம் ஆண்டு முதன்முறையாக பெண்ணொருவரை நிலவுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
மனிதன் முதன்முதலில் நிலவில் கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2024ம் ஆண்டு பெண்ணொருவரை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்ட்டிமிஸ் 1 விண்கலம், நாசாவின் ஒரியன்ட் ஏவுகணை மூலம் விண்ணிற்கு ஏவப்பட்டு முதல் பெண் நிலவில் கால்பதிப்பாரென நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.