தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் தபால் சேவைகள் தொழிற்சங்கம் வேலைநிறத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. அ
தனடிப்படையில் இன்று நள்ளிரவு வரையில் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் எச்.கே காரியவசம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.