அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் அதிகரித்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. 38 பாகை செல்சியஸ் வெப்ப நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிவ்யோர்க், பிலதெல்பியா மற்றும் வொசிங்டன் ஆகிய நகரங்களில் குறித்த அதிகரித்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அரிசோனா மற்றும் மியாமி ஆகிய பகுதிகளில் நிலவும் வெப்பநிலையை விடவும் வழக்கத்திற்கு மாறாக அமெரிக்காவின் கிழக்குப்பகுதியில் உஷ்ணம் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வெப்பநிலை அதிகரிப்பினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த அதிகரித்த வெப்ப நிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்குமென அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.