88 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னை நோக்கி பயணிப்பதற்கு விமான நிலையத்திற்கு வருகை தந்த 23 வயது இளைஞனின் பயணப் பையிலிருந்து வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு இலட்சத்து 90 ஆயிரம் சவுதி ரியால் பணம் இதன்போது பெறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.