பிரபல நகைச்சுவை நாடக நடிகர் மஞ்சுநாத் நாயுடு மேடையில் நாடகம் நடித்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் திடீரென உயிரிழந்தார். ஆனால் அதை அறியாத ரசிகர்கள் நாடகத்தில் இதுவும் ஒருகாட்சி என்று அவர் துடிதுடித்து விழுந்து உயிரை விட்டதையும் ரசித்துக் கொண்டிருந்தனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த 36 வயதேயான மஞ்சுநாத் நாயுடு, துபாயில் மேடை நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இந்த சோக சம்பவம் நடந்தது.