போர்த்துக்கலின் மத்திய பகுதியில் ஏற்ப்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு படைவீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனர்த்தத்தினால் 8 தீயணைப்பு படைவீரர்கள் உட்பட பொதுமக்கள் 12 பேர் காயமடைந்துள்ளனர். காட்டுத்தீ அபாயம் ஏற்ப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.