புலனாய்வு சேவையை மேலும் வலுப்படுத்தி விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கமல் இருப்பதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுமென பிரதமர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 200 க்கும் அதிகமானோர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.