‘ஊருக்கு ஒரு கோடி’ செயற்திட்டங்கள் இன்று மக்களிடம் கையளிப்பு
Related Articles
‘ஊருக்கு ஒரு கோடி’ திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் இன்று மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளன. இளைஞர், யுவதிகளின் கரங்களால் திட்டங்கள் நிறைவுசெய்யப்பட்டன. 10 ஆயிரம் இலட்சம் ரூபா பெறுமதியான 500 செயற்திட்டங்கள் ஒரு வார காலத்திற்குள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இதன் ஆரம்ப வைபவம் பொல்பித்திகம அமுனுகொல பகுதியில் இடம்பெறவுள்ளது.
திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்துவைக்கவுள்ளார். ஊருக்கு ஒரு கோடி ரூபா திட்டத்தை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆரம்பித்திருந்தது. இளைஞர், யுவதிகளின் மனிதவள சக்தியை பயன்படுத்தி செயற்திட்டங்களை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். இதேவேளை சிறந்த செயற்திட்டங்களை முன்னெடுத்த இளைஞர் குழுக்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.