218வது மாதிரி கிராமம் மக்கள் உரிமைக்காக வழங்கப்பட்டுள்ளது. மாத்தளை, வில்கமுவ, நாமினிகம பகுதியில் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. மகா ராவணாகம என இதற்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது. 21 வீடுகள் மாதிரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சஜித் பிரேமதாச மாதிரி கிராமத்தை பயனாளிகளிடம் கையளித்தார்.
இதேவேளை 219வது மாதிரி கிராமம் இன்று பிற்பகல் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. மாத்தளை, நாவுல, அரங்கல பகுதியில் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. விஜயரத்ன பண்டாபுர என இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் 26 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.