பாடசாலை மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்க கூடிய நடமாடும் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்குஇந்த செயலி மூலம் தொழில் வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ள முடிவதோடு எதிர்காலத்தில் தாம் செய்ய எதிர்பார்த்துள்ள தொழில் குறித்த தீர்மானத்தை மேற்கொள்ள முடியும்.
இதன் மூலம் குறித்த தொழில்கள் தொடர்பான தகவல்களை அவர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும். தேசிய மனித வள கவுன்சில் இந்த செயலியை உருவாக்கியுள்ளது. இது அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால் கொழும்பில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.