இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் சுவிட் ஒன் டு பியூச்சர் நிகழ்ச்சி அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மை லெக்கோ எப்பின் ஊடாக ஏராளமான வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் இதன்மூலம் சேவையாற்ற முடியும். இதன்மூலம் மின்சார பாவனை கணக்கு வழக்கு மின்வெட்டு, மின் கட்டணம் செலுத்தல் மற்றும் திருத்த பணிகள் போன்ற சேவைகளை பெற்று கொள்ள முடியும். இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மின் கட்டணம் எப்போதும் அதிகரிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு உரையாற்றுகையில் :
“அண்மையில் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகம் தடைப்பட்டது. 6800 கோடி செலுத்த வேண்டியிருந்தது. அது உண்மை தான். மறுபுறத்தில் அரசாங்கத்தினால் இலங்கை மின்சார சபைக்கு 7000 கோடி ரூபாவை செலுத்த வேண்டியிருந்தது. இவ்விரண்டு கட்டணத்தையும் செலுத்தியிருந்தால் எவ்வித பிரச்சினையும் தோன்றியிருக்காது. இதுபோன்ற சூழ்நிலையில் கடன் பெற்று கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டால் அது மேலும் சிக்கலாகி விடும். இறுதியில் வாடிக்கையாளர்களே பாதிக்கப்படுவார்கள். இலங்கை மின்சார சபையும் லெகோ நிறுவனமும் உற்பத்தி செலவை விட குறைந்த விலையில் மின்சாரத்தை விநியோகிக்கின்றது. இதனை பற்றி யாரும் பேசுவது இல்லை. வீட்டு மின்சாரத்திற்கான கட்டணத்தை அதிகரிக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.” என தெரிவித்தார்