மதுபோதையில் வாகனம் செலுத்திய 209 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 5ம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் விசேட சுற்றிவளைப்பு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய இதுவரை 3 ஆயிரத்து 702 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.