சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட பீடி இலைகள் மற்றும் புகையிலைகளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மண்டதீவு சந்தியில் சந்தேகத்திற்கிடமான லொறியொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஆயிரத்து 359 கிலோ பீடி இலைகள் மற்றும் ஆயிரத்து 34 கிலோ புகையிலைகள் என்பன கைப்பற்றப்பட்டன. சந்தேகநபர்கள் கலேவெல பகுதியை சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களுடன் பீடி இலை, புகையிலை மற்றும் லொறி என்பன மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்