இபோலா வைரஸ் மீண்டும் உலகெங்கும் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொங்கோ நாட்டில் தற்போது இபோலா வைரஸ் துரிதமாக பரவி வருகின்றது. அங்கு 1600 பேர் இவ்வைரஸ் தாக்கத்தினால் மரணமடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆபிரிக்க கண்டத்தில் உள்ள கோமா நாட்டிலும் இபோலா வைரஸ் தாக்கிய நோயாளி ஒருவர் இனங்காணப்பட்;டுள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மேற்கு ஆபிரிக்காவில் இபோலா வைரஸ் தாக்கத்தினால் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்;.