வவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியிலிருந்து மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா ஓமந்தைக்கும் விளக்குவைத்தகுளம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலிருந்து 7 மிதிவெடிகள் மீட்கப்பட்டதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் நேற்று கனரக இயந்திரங்களின் உதவியுடன் துப்பரவு பணிகள் இடம்பெற்றன. இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதியில் இம் மிதிவெடிகள் காணப்பட்;டன. இதனை காணி உதவியாளர் உடனடியாக பொலிஸாருக்;கு அறிவித்துள்ளார். இந்நிலையில் பொலிஸார் மிதிவெடிகள் காணப்பட்ட பகுதியை அடையாளப்படுத்தியதுடன் விசேட அதிரடி படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.